ஆப்நகரம்

இந்தியா கோவில் என்றால் தமிழ்நாடு தான் கடவுள் இருக்கும் கருவறை: முதல்வர் பழனிசாமி

மகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமியாக தமிழகம் உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Jul 2018, 2:24 pm
மகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமியாக தமிழகம் உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil palaniswami_wins_story_647_021817053639


சென்னை மாதவரத்தில் ஆச்சார்ய ஸ்ரீ மஹாஸ்ரமண் அவர்களின் சதுர்மாஸ் பிரவாஸ் விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

‘இந்தியா ஒரு திருக்கோயில் என்றால், அதில் இறைவன் உறைந்திருக்கும் கருவறைதான் ‘தமிழ்நாடு’ மகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமி, ‘தமிழ்நாடு’.பக்தியும் அறமும் தழைத்து விளையும் புண்ணிய பூமி, ‘தமிழ்நாடு’.பல்வேறு இடங்களில் இருந்து, ஞானிகளும், மகான்களும், குருமார்களும், ஆன்மிகத் தேடலுக்காகவும், அமைதிக்காகவும் தமிழ்நாட்டுக்கு வருகை தருவது என்பது தொன்று தொட்டு நடைபெற்று வரும் சிறப்பாகும். இதன் அடிப்படையில், நல்லெண்ணம், அஹிம்சை, போதை ஒழிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி, இன்று தமிழ் மண்ணில் நடைபயணம் மேற்கொண்டுள்ள தவநெறியாளர் அருட்திரு. மகாஸ்ரமண் அடிகளாரை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வரவேற்பதில் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த இனிய விழாவிற்கு வருகை தந்துள்ள, உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

உலகில் உள்ள அனைத்து சமயமும் மனிதனை பக்குவப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. தீங்கு செய்யாமை, கொல்லாமை, பொய்யாமை, தூய்மை, கருணை, இரக்கம், உலக அமைதி, அறவாழ்வு போன்ற உண்மைகளை மனிதர்களிடத்தில் விதைப்பதே அனைத்து சமயங்களும் தலையாய கடமையாகக் கொண்டுள்ளன. சமயங்கள் பரப்பும் கொள்கைகள் அனைத்தும் மனிதர்கட்கு இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை விளைவிக்கின்றன.’

இவ்வாறு அவர் பேசினார்.

அடுத்த செய்தி