ஆப்நகரம்

தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்: அடிப்படை தேவைகளை தயார் செய்து கொள்ளுங்கள்!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது

Samayam Tamil 29 Oct 2020, 2:57 pm
தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி ,தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனிடையே, தலைநகர் சென்னையில் விடிய விடிய இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு சென்னையில் குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பதிவாகி உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னை மக்கள் வடகிழக்கு பருவமழை குறித்த புகார்கள் தெரிவிக்க 044 2538 4530, 044 2538 4540 ஆகிய அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 24/7 இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு மையத்தினையும் (1913) பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சென்னையில் வெள்ள அபாய பதற்றம்' - தமிழக அரசுக்கு ஸ்டாலின் அலெர்ட்

இந்நிலையில், தமிழகத்தில் கனமழை தொடர்பாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மஞ்சள் அலர்ட் என்றால் என்ன?பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம். மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது. இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

அடுத்த செய்தி