ஆப்நகரம்

ராமேஸ்வரத்தில் இடிந்து விழுந்த இந்தியன் வங்கி கட்டிடம்: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்!!

ராமேஸ்வரத்தில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த இந்தியன் வங்கியின் மேல்கூரை உடைந்து விழுந்தது. இதனால் வங்கிக்குள் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Samayam Tamil 4 Jul 2019, 4:42 pm
ராமேஸ்வரத்தில், ராமநாதசுவாமி கோயில் அருகே தனியார் கட்டிடத்தில் கடந்த 35 ஆண்டுகளாக இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் தங்களது பணியை துவக்கி நடத்தி வந்தனர். வாடிக்கையாளர்களும் வங்கிக்கு வந்து இருந்தனர்.
Samayam Tamil Indian Bank


திடீரென முற்பகல் 1 மணியளவில் வங்கியின் காசாளர் பகுதியில் மேல்கூரை காங்கீரிட் உடைந்து விழுந்தது. இதில் வங்கியின் மேல் பகுதியில் சீலிங் அடைக்கப்பட்டு இருந்ததால் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் காயமின்றி தப்பினர். கணினி உள்பட வயர்கள் சேதமடைந்ததால் அனைத்து வங்கி பணிகளும் நிறுத்தப்பட்டன.

வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் பாதுகாப்பு கருத்தி உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இரண்டு நாட்கள் வங்கியின் பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

அடுத்த செய்தி