ஆப்நகரம்

தமிழகம் பற்றி இந்திய அரசுக்கு துளி கூட கவலை இல்லை: பேராசிரியர் த.ஜெயராமன்!

தமிழகம் அழிவதைப் பற்றி கொஞ்சம் கூட இந்திய அரசுக்கு துளி கூட கவலை இல்லை என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினை சேர்ந்த பேராசிரியர் த.ஜெயராமன் கூறியுள்ளார்.

Samayam Tamil 18 May 2019, 10:25 am
தமிழகம் அழிவதைப் பற்றி கொஞ்சம் கூட இந்திய அரசுக்கு துளி கூட கவலை இல்லை என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினை சேர்ந்த பேராசிரியர் த.ஜெயராமன் கூறியுள்ளார்.
Samayam Tamil தமிழகம் பற்றி இந்திய அரசுக்கு துளி கூட கவலை இல்லை: பேராசிரியர் த.ஜெயராமன்!
தமிழகம் பற்றி இந்திய அரசுக்கு துளி கூட கவலை இல்லை: பேராசிரியர் த.ஜெயராமன்!


திருவாரூரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் நூல் வெளியீட்டு விழாவுக்கு வருகை புரிந்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினை சேர்ந்த பேராசிரியர் த.ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

தமிழகம் அழிவதைப் பற்றி கொஞ்சம் கூட இந்திய அரசுக்கு துளி கூட கவலை கிடையாது. மூன்று கட்டமாக ஹைட்ரோகார்பன் ஏலத்தை நடத்தியுள்ளனர். அதில் வேதாந்தா, ஒஎன்ஜிசி ஏலம் எடுத்து 341 கிணறுகள் அமைக்க உள்ளனர். ஆய்வு அனுமதியும் வழங்கப்பட்டுவிட்டது.

1.8.2018-ல் இந்திய அமைச்சரவை கூடி 2016-க்கு முன்னதாக உள்ள எண்ணை கிணறுகளும் ஹைட்ரோகார்பன் எடுக்க பயன்படுத்தபடும் என அறிவித்தது. காவிரிபடுகையில் இனி 500 அடி முதல் 10 ஆயிரம் அடி வரை நச்சுக்கலவை செலுத்தப்படும். தமிழகம் அழிய இருக்கிறது.

அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டம் அனுதிக்கப்பட மாட்டாது என உறுதி சொல்லி உள்ளனர்.

எனவே களம் இறங்கி அனைத்து கட்சியின் தொண்டர்களும் ஒன்றுதிரண்டு போராடி தமிழகத்தை பாதுகாக்க வேண்டும். தமிழக அரசு மக்களின் கருத்து கேட்காமல் விதிமுறை நடைமுறைபடுத்த கோரிக்கை மனு கொடுத்துள்ளது. கெயில் குழாய் அமைப்பதை தடுத்தால் மக்கள் மீது கைது, வழக்கு என போடுகின்றனர். தமிழக அரசு மக்களுக்கு பாதுகாவலாக இத்திட்டத்தை தடுந்து நிறுத்த வேண்டும் என கூறினார்

அடுத்த செய்தி