ஆப்நகரம்

ரஷ்யாவில் ராட்சத அலையில் சிக்கி தமிழ் மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு

ரஷ்யாவில் தங்கி மருத்துவ துறையில் முதுநிலை படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Samayam Tamil 2 May 2018, 9:47 am
ரஷ்யாவில் தங்கி மருத்துவ துறையில் முதுநிலை படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Samayam Tamil indian-students-dead-in-russia


சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த நவீன் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் ஜெய்வந்த். இவர்கள் இருவரும் முதுநிலை மருத்துவ கல்வி முடித்துள்ளனர்.

இந்நிலையில் முதுநிலையில் மருத்துவம் படிக்க, நவீன் மற்றும் ஜெய்வந்த் இருவரும் கடந்தாண்டு நீட் தேர்வு எழுதினர். ஆனால் அதில் அவர்கள் வெற்றிப்பெற்றவில்லை.

இதன் காரணமாக மாணவர்கள் இருவருக்கும் ரஷ்ய நாட்டில் முதுநிலை மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. அதை தொடர்ந்து ரஷ்யாவிற்கு பயணமான அவர்கள், அங்கு தங்கி முதுநிலை மருத்துவம் படித்து வந்தனர்.

நேற்று தமிழக மாணவர்கள் இருவரும், நண்பர்களுடன் சென்று கடலில் குளிக்கச்சென்றுள்ளனர். அப்போது பெரிய ராட்சத அலை மேலெழும்ப அதில் நவீன் மற்றும் ஜெய்வந்த் இருவரும் சிக்கிக்கொண்டு, காணாமல் போயினர்.

உடனிருந்த நண்பர்கள் பல முறை தேடியும் அவர்கள் இருவரும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில் ராட்சத அலையில் சிக்கி நவீன் மற்றும் ஜெய்வந்த் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுக்குறித்த தகவல்கள் இரண்டு பேரின் குடும்பாத்தாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உயிரிழந்த நவீன் மற்றும் ஜெய்வந்த் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி