ஆப்நகரம்

வீட்டுக்கே வந்து டீசல் விநியோகம்: ஆன்லைன் சேவை துவக்கம்!

சென்னை: வீட்டுக்கே சென்று டீசல் விநியோகிக்கும் ஆன்லைன் சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னையில் துவங்கியுள்ளது.

Samayam Tamil 21 Dec 2018, 11:42 am
சென்னை கொளத்தூரில் இதற்கான துவக்க நிகழ்ச்சி நடந்தது. அப்போது சுமார், 6000 லிட்டர் டீசல் நிரப்பப்பட்ட வாகனத்தை அதிகாரிகள் கொடி அசைத்து துவங்கி வைத்தனர்.
Samayam Tamil 1


ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்பவர்களின் குறைந்தபட்ச ஆர்டர் அளவு 200 லிட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2,500 லிட்டருக்கு மேல் ஆர்டர் செய்பவர்கள் சேமிப்பதற்கான உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இந்த சேவையில் தற்போதைக்கு, டீசல் மட்டுமே டெலிவரி செய்யப்படுகிறது. விரைவில் பெட்ரோலும் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி