ஆப்நகரம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகிறார்..!

சென்னை: இந்தி பிரசார் சபா நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகிறார்.

Samayam Tamil 21 Feb 2019, 5:41 am
சென்னை இந்தி பிரசார சபாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகிறார்.
Samayam Tamil இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை


தமிழ்நாட்டுக்கு இன்று வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இருநாள் பயணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு வருகை தரவுள்ளார்.

அதன்படி, சென்னை தி.நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று ராம்நாத் கோவிந்த பங்கேற்கிறார். அப்போது, மகாத்மா காந்தி சிலையை அவர் திறந்து வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து, ஆந்திரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என ராஷ்ட்ரபதி பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த செய்தி