ஆப்நகரம்

பயணிகள் ரயில் அட்டவணை வெளியீடு: தமிழகத்துக்கு ஏமாற்றம்

நாடு முழுவதும் ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ள பயணிகள் சிறப்பு ரயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 May 2020, 12:21 am
ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ள 200 பயணிகள் சிறப்பு ரயில்களுக்கான அட்டவணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்துக்கு ஒரு ரயில் கூட இயக்கப்பட போவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
Samayam Tamil passwnger train


நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று (மே 19) அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்த ரயில் சேவைக்கான கால அட்டவணையை ரயில்வே அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை (மே21) காலை 10 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 முதல் பயணிகள் ரயில்கள் இயக்கம்: இந்த முறை டிக்கெட் ரேட் கம்மி!

ஆனால், தமிழகத்துக்கான ரயில் சேவை குறித்த விவரங்கள் எதுவும் இன்று வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில் இடம்பெறவில்லை. இதன் மூலம், இரண்டு மாதங்களுக்கு மேலான பொதுமுடக்கத்துக்கு பிறகு முதல்கட்டமாக ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ள ரயில்களில் ஒன்று கூட தமிழகத்தில் இயக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.

இதனால் பொதுமுடக்கத்தின் விளைவாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உறவுகளை பிரிந்து தவித்துவரும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

முன்னதாக, புலன்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மே 1 ஆம் தேதியில் இருந்தும், தலைநகர் டெல்லியில் இருந்தும் சென்னை, பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களுக்கு மே 12 ஆம் தேதியில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி