ஆப்நகரம்

இந்தியா டுடே ஊடக மாநாட்டை துவங்கி வைத்தார் சசிகலா

சென்னையில் 'இந்தியா டுடே' ஊடக நிறுவனத்தின் இரண்டு நாள் மாநாடு இன்று அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா துவங்கி வைத்தார்.

TNN 9 Jan 2017, 10:34 am
சென்னையில் 'இந்தியா டுடே' ஊடக நிறுவனத்தின் இரண்டு நாள் மாநாடு இன்று அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா துவங்கி வைத்தார்.
Samayam Tamil indiatoday southconclave17 invocation
இந்தியா டுடே ஊடக மாநாட்டை துவங்கி வைத்தார் சசிகலா


இந்தியா டுடே ஊடக நிறுவனத்தின் இரண்டு நாள் மாநாடு இன்று துவங்கியது. இந்த மாநாட்டில் ஆறு மாநில முதல்வர்கள் , திரைப்பட நடிகர் கமலஹாசன் , தொழில் துறை வல்லுநர்கள் மற்றும் அரசியல், திரையுலக பிரமுகர்கள் பங்கேற்று தங்களது உரைகளை ஆற்றுகின்றனர்.

இந்த மாநாட்டின் துவக்கவிழாவை அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா விளக்கேற்றி துவங்கி வைத்தார்.துவக்க விழாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படம் திறந்து வைக்கப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் அதிமுகவின் ராஜ சபா உறுப்பினர் மைத்தரேயன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த சாதனைகள் மற்றும் ஜெ., வின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். இந்த துவக்க விழாவில் சசிகலா , தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் , இந்தியா டூடே நிறுவனத்தின் ஆசிரியர் அரூண் புரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் கட்சி சார்ந்த நிகழ்ச்சி அல்லாமல் பங்குபெற்ற முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும்.

அடுத்த செய்தி