ஆப்நகரம்

சென்னை: நடுவானில் அதிர்ச்சி..! பெண் பயணி மாரடைப்பால் மரணம்..

கொல்கத்தா - சென்னை வந்துகொண்டிருந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.

Samayam Tamil 1 Nov 2019, 2:17 pm
இன்று (1 -11 -2019) கொல்கத்தாவிலிருந்து சென்னை விமான நிலையம் நோக்கி பரந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த, நிஷா (43) என்ற பெண் மாரடைப்பால் உயிரிழந்தார். இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கபட்டது.
Samayam Tamil 2


கடலில் மூழ்கும் சென்னையின் முக்கிய இடங்கள்: அதிர்ச்சி அளிக்கும் புதிய தகவல்!!

இந்நிலையில் விமானம், விமான நிலையத்திற்கு வந்தடைந்ததும், போலீசார் நிஷாவின் உடலை கைப்பற்றி, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு நடத்திய விசாரணையில் வெளிவந்த தகவல்களாவன, விமானத்தில் உயிரிழந்த நிஷா மேற்கு வங்காளத்தை சேர்ந்தவராவார். இவருக்கு ஏற்கெனவே இதய பிரச்சனை இருந்துவந்துள்ளது.

இப்படி ஆயிட்டாரே சீமான்..!! கட்சியிலிருந்து விலகும் பெண்கள்.. காரணம் என்ன.?

இதற்காக சென்னையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று கூட சிகிச்சைக்காகத்தான் வந்திருக்கிறார். ஆனால் விமானத்திலேயே இவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலைய போலீசார் நிஷாவை குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

நிஷா முன்னதாக சென்னையில் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், அவருடைய உறவினர் குறித்த விவரம் ஆகியவற்றை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேட்டூர் அணை உபரி நீரை சேகரிக்க புதிய திட்டம்! சேலத்தில் கலக்கும் எடப்பாடி

இந்த விமானம் வழக்கமாக கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் பெங்களூா் புறப்பட்டு செல்லும். ஆனால் விமானத்திலேயே பயணி ஒருவா் இறந்துவிட்டதால்,விமானத்தை முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு இரண்டரை மணி நேரம் தாமதமாக பெங்களூா் புறப்பட்டு சென்றது.

அடுத்த செய்தி