ஆப்நகரம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுக தேர்தல்: சட்ட மசோதா இன்று தாக்கல்

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு ஏற்கனவே அரசாணை வெளியிட்டுள்ளது

Samayam Tamil 7 Jan 2020, 12:31 pm
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பின்னர், நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏணைய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் 27,30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

முதல் கட்டத் தேர்தலில் 77.10 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ள தரவுகளின்படி, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் குறைவான இடத்திலும், திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

பொங்கல் போனஸ் எவ்வளவு தெரியுமா?- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

உள்ளாட்சி சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு !!

முன்னதாக, மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மறைமுக தேர்தலின் படி, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான பிரதிநிதிகளை பொதுமக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்க மாட்டார்கள். மாறாக வார்டு கவுன்சிலர்கள் மூலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி