ஆப்நகரம்

விடுபட்ட இடங்களுக்கு மறைமுகத் தேர்தல் தேதி அறிவிப்பு- மாநில தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் மறைமுகத் தேர்தலில் விடுபட்ட இடங்களுக்கு தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 22 Jan 2020, 2:52 pm
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்குகள் ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
Samayam Tamil Election Commission


இதன்மூலம் ஊராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் ஆகியோர் வாக்குச்சீட்டு மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு கடந்த 11ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

பாஜகவிற்கு கல்தா; கொளுத்திப் போட்ட அதிமுக அமைச்சர்- தகிக்கும் அரசியல் கூட்டணி!

இந்த தேர்தலின் போது ஆட்கடத்தல், குதிரைபேரம் ஆகியவற்றால் பல்வேறு இடங்களில் குளறுபடிகள் நடைபெற்றன. சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மறைமுகத் தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு வரும் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹல்லோ ராஜ்பவனா?- அமைச்சர் பாஸ்கரனுக்கு ’ஷாக்’ கொடுத்த எஸ்.வி.சேகர்!

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடவடிக்கை காலை 10.30 மணிக்கும், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடவடிக்கை பிற்பகல் 3 மணிக்கும் தொடங்கப்பட வேண்டும்.

மறைமுகத் தேர்தல் கூட்டம் தொடர்பாக 7 வேலை நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும். மறைமுகத் தேர்தல் தொடர்பான நீதிமன்ற நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். இவற்றை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரியது; அதுவும் நம்ம சேலத்தில்- தேதி குறிச்ச தமிழக முதல்வர்!

அடுத்த செய்தி