ஆப்நகரம்

பச்சை நிறமாக காணப்படும் மேட்டூர் அணை நீர்: ரசாயனம் கலந்ததால் விபரீதம்!

காவிரி நீரில் ரசாயனம் கலந்து வருவது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Samayam Tamil 28 Oct 2018, 12:30 pm
மேட்டூர் அணைக்கு வரும் காவிரி நீரில் ரசாயனம் கலந்து வருவது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
Samayam Tamil cats
பச்சை நிறமாக காணப்படும் மேட்டூர் அணை நீர்


தமிழகத்திலுள்ள 14 மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மூலம் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் காவிரி ஆற்றில் அங்குள்ள சில தொழிற்சாலைகள் சட்ட விரோதமாக ரசாயனக் கழிவுகளை திறந்து விடுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் பச்சை நிற படலம் சூழ்ந்து காணப்படுகிறது.

மேலும் ரசாயனக் கழிவுப் படலத்தில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் அத்தியாவசிய தேவைகளுக்கு நீரை பயன்படுத்த முடியவில்லை. நீரைப் பருகும் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் நீர் மாதிரியை எடுத்துச் செல்லும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

எனவே தமிழக அரசு மத்திய அரசிடம் முறையிட்டு, கர்நாடகாவில் இருந்து காவிரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி