ஆப்நகரம்

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 9,097 கனஅடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 9 ஆயிரத்து 97 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 18,600 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது!

Samayam Tamil 23 Sep 2019, 12:52 pm
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 9 ஆயிரத்து 97 கனஅடியாக அதிகரித்துள்ளது.
Samayam Tamil மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 9,097 கனஅடியாக அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 9,097 கனஅடியாக அதிகரிப்பு!


கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து அதிகளவு தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 7-ம் தேதி, அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் தீட்டும் சதி- அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ராணுவத் தளபதி!

இந்நிலையில், காவிரியின் நீர்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளிலிருந்து, காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் படிப்படிப்பாக குறைந்தது.

இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்ட உபரி நீர், கடந்த 14-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 9 ஆயிரத்து 97 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 18,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. யாகவும் உள்ளது. கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியில் தொடர்ந்து நீடித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல மாட்டேன்; ஜாமீன் கொடுங்க - உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம்!

அடுத்த செய்தி