ஆப்நகரம்

ஜி ஸ்கொயர் வருமான வரி சோதனை: லாபத்தில் திடீர் உச்சம் எப்படி? கேள்விகளால் துளைக்கும் அதிகாரிகள்!

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் எந்த கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 24 Apr 2023, 10:56 am
ஜி ஸ்கொயர் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இல்லத்திற்கு காலை 6 மணிக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், உரிமையாளர்கள் வீட்டில் இல்லாததால், வெளியில் இருந்தவர்களுக்கு தகவல் சொல்லி வீட்டுக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil g square it raid


ஜி ஸ்கொயர் ஆடிட்டர் சண்முகராஜ் இல்லத்திலும் வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் முதல்வரின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமானவர்.

ஜி ஸ்கொயர் உரிமையாளர் பாலாவிடம் காலை முதல் விசாரித்து வரும் வருமான வரித்துறையினர் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வருகின்றனர். தயாராக கொண்டுவந்திருந்த ஆவணங்களை காட்டி விவரங்கள் மற்றும் ஆதாரங்களை கேட்டு வருகின்றனர்

வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறதா, வரவு செலவு கணக்குகள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வரும் வருமான வரித்துறையினர் கட்டடம் வாங்கும் வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் தொகைக்கு முறையாக வருமான வரி செலுத்தப்படுகிறதா என்பதையும் விசாரணையில் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ஐடி ரெய்டு: அண்ணாமலை புகார் எதிரொலி!
தொடர் நட்டத்தை சந்தித்து வந்த ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக ஆட்சி அமைந்த பிறகு உச்ச லாபத்திற்கு சென்றது எப்படி என்ற கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2017 முதல் 2021 வரை ஜி ஸ்கொயர் நிறுவனம் நட்டத்தில் இயங்கியதாக ஆவணங்களை தாக்கல் செய்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பல கோடி ரூபாய் லாபத்திற்கு நிறுவனத்தை மாற்றியது எப்படி என அதிகாரிகள் கேள்வி எழுப்பிவருவதாக தகவல்கள் வெளியாகின்றன.
புதுமை பெண் திட்டம்: மாணவிகளுக்கு இறையன்பு ஸ்பெஷல் அட்வைஸ்!
நிறுவனத்தில் கறுப்பு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதா, ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு உள்ளதா, ஆளுங்கட்சியை சேர்ந்த யார் யார் எல்லாம் நிர்வாகிகளாக உள்ளனர், அவர்கள் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் முதலீடு செய்தது ஏன், உண்மையான உரிமையளர் பாலா தானா என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி