ஆப்நகரம்

லண்டனில் அமைச்சர் மனோ தங்கராஜ்: பென்னி குவிக்குக்கு மரியாதை!

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் லண்டனில் பென்னி குவிக் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Samayam Tamil 9 May 2022, 10:57 am
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் லண்டன் கேம்பர்லி நகரில் முல்லை பெரியார் அணையினை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Samayam Tamil mano thangaraj


லண்டனில் நடந்த தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளிகள் மாநாட்டில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் லண்டன் கேம்பர்லி நகரில் முல்லை பெரியார் அணையினை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் கல்லறை அமைந்துள்ள தேவாலய நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று, எல்காட் நிர்வாக இயக்குநர் அஜய் யாதவ் மற்றும் லண்டன் திமுக அயலக அணி அமைப்பாளர் பைசல் சந்தன பீர் ஒலி ஆகியோருடன் தேவாலயம் சென்று கர்னல் ஜான் பென்னி குவிக் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் லண்டன் ரெக்ரியேஷன் பார்க்கில் தமிழக அரசு சார்பாக கர்னல் ஜான் பென்னி குவிக் சிலை நிறுவப்பட உள்ள இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
ரேஷன் அட்டைகளில் மாற்றம்: மாதம் 1000 ரூபாய் திட்டமா? அதிகாரிகள் விளக்கம்!
ஜான் பென்னி குவிக் சிலை வைப்பது தொடர்பாகவும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துகளை அவர்களுக்கு தெரிவித்தார். உடன் லண்டன் திமுக அயலக அணி நிர்வாகிகள் சத்யா, செந்தில் குமார், பிரேம் ஆகியோர் இருந்தனர்.

அடுத்த செய்தி