ஆப்நகரம்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக களமிறங்கிய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள்

நெடுவாசல் ஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக சென்னை சிறுசேரி ஐடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TNN 30 Mar 2017, 12:12 pm
சென்னை : நெடுவாசல் ஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக சென்னை சிறுசேரி ஐடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil information technology staffs supports to farmers
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக களமிறங்கிய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள்


நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் 15 நாட்களுக்கு மேலாக தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஆதரவு தெரிவித்தது போல, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, சென்னை, சிறுசேரி சிப்காட் வளாக நுழைவாயில் அருகே 100 பேர் வரிசையாக பதாகைகள் ஏந்திய வண்ணம் அமைதியாக அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸார் கேட்டுக்கொண்டதன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.

அடுத்த செய்தி