ஆப்நகரம்

பள்ளத்தில் விழுந்த பெண் யானை பரிதாப பலி

பள்ளத்தில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்த பெண் யானை பரிதாபமாக இறந்தது.

Samayam Tamil 3 Jun 2018, 2:42 pm
பள்ளத்தில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்த பெண் யானை பரிதாபமாக இறந்தது.
Samayam Tamil elephant-424459_960_720


நீலகிரி மாவட்டம் சேரம்பாடி படச்சேரி பகுதியில் பெண் யானை ஒன்று சனிக்கிழமை இரவு ஊருக்குள் புகுந்தது. குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிக்கு சென்ற யானை அங்கு சுவர் ஒன்றை உடைத்துக்கொண்டு சரிவான பகுதியில் விழுந்தது.

அப்போது அதன் வாயில் படுகாயம் ஏற்பட்டுவிட்டது. அங்கிருந்து எழுந்திருக்க முடியாமல் தவித்த யானையை மீட்க, வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
யானையை தூக்கி நிறுத்த முயற்சி வனத்துறையினர் நீண்ட நேரமாக போராடியும், முயற்சி பலனளிக்காமல் யானை உயிரிழந்துவிட்டது. இதே யானைதான் கடந்த வாரம் சேரம்பட்டியில் ஒரு மூதாட்டியைக் கொன்றதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி