ஆப்நகரம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ்; விசாரணை தொடக்கத்தில் தாமதம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

TNN 30 Oct 2017, 11:41 am
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Samayam Tamil inquiry commission delays investigation in jayalalitha death
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ்; விசாரணை தொடக்கத்தில் தாமதம்!


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவர் இறந்து ஓராண்டு நிறைவடைய உள்ளது. இந்த சூழலில் அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் குறித்து, எந்தவித தெளிவும் கிடைத்தபாடில்லை.

இதற்கிடையில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

இதையடுத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர், ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் விசாரணை போயஸ் தோட்டத்தில் இருந்து இன்று தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நீதியரசர் ஆறுமுகசாமி நோட்டீஸ் அளித்துள்ளார். அவர்களிடம் இருந்து விளக்கம் கிடைத்த பிறகே விசாரணை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருநபர் கமிஷன் விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது கோவையில் உள்ள நீதியரசர் ஆறுமுகசாமி வரும் புதன் அல்லது அதன்பிறகு சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது. விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 20 பேர் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Inquiry Commission delays investigation in Jayalalitha death.

அடுத்த செய்தி