ஆப்நகரம்

சேலத்தில் 17ஆம் நூற்றாண்டு கன்னட கல்வெட்டு கண்டுபிடிப்பு

சேலம் மாவட்டம், காமாக்காபாளையத்தில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

TNN 17 Jul 2016, 5:35 pm
சேலம் : சேலம் மாவட்டம், காமாக்காபாளையத்தில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil inscriptions in kannada unearthed near selam
சேலத்தில் 17ஆம் நூற்றாண்டு கன்னட கல்வெட்டு கண்டுபிடிப்பு


சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள காமக்காபாளையத்தை சேர்ந்த செல்வமணி என்பவரது விவசாய நிலத்தின் அருகே தொல்லியல் துறையினர் மேற்கொண்ட கள ஆய்வு நடத்தினர். அப்போது, முட்புதர்களுக்கு இடையே இருந்த இரண்டு கல்வெட்டுகளைத் தோண்டி எடுத்தனர்.

கல்வெட்டுகளில் ஒன்று 147 செமீ நீளமும் 50 செமீ அகலமும் கொண்டிருந்த்து. மற்றொன்று 185 செமீ நீளம் மற்றும் 45 செமீ அகலத்துடன் இருந்தது. இரு கல்வெட்டுகளிலும் இருபுறமும் கன்னட எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

12ம் நூற்றாண்டில் காமக்காபாளையம் மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளதாகவும் காஞ்சிபுரத்தில் இருந்த 10 கோயில்களுக்கு இங்கு வசூலிக்கப்பட்ட வரி தானமாக அளிக்கப்பட்டதாகவும் என்றும் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்குப் பக்கத்திலேயே, 20 ஆண்டுகளுக்கு முன்பு கிணறு தோண்டும் போது மணி, பூஜை தட்டு உள்ளிட்ட பொருட்கள் கிடைத்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அப்பகுதியில் கள ஆய்வு நடத்தச்சென்ற தொல்லியல் துறையினர் இந்த கல்வெட்டுக்களை கண்டுபிடித்துள்ளனர். இவ்விடத்தில் கி.பி 17ம் நூற்றாண்டில் பெருமாள் கோயில் இருந்திருக்கலாம் என்றும் தொடர்ந்து இப்பகுதியில் அகழ்வாய்வு நடத்தினால் இன்னும் வரலாற்றுத் தகவல்கள் வெளிப்படலாம் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி