ஆப்நகரம்

பொதுக்குழுவில் ஓபிஎஸ்சுக்கு நேர்ந்த அவமானம்!

அதிமுக பொதுக்குழுவுக்கு வந்த ஓபிஎஸ்சை வெளியேற சொல்லி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Samayam Tamil 23 Jun 2022, 11:44 am
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அதனை விசாரித்த நீதிமன்றம், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.
Samayam Tamil ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்


இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு கூட்டம் நடத்தலாம். ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் மீது மட்டும் ஆலோசித்து முடிவெடுக்கலாம். மற்ற புதிய தீர்மானங்களில் ஆலோசித்தாலும் அதன் மீது எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டது.

அதன்படி, அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட ஓபிஎஸ், மாற்றுப்பாதை வழியாக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்தார்.

அதிமுக பொதுக்குழு: பரபரப்பு காட்சிகள் உடனுக்குடன்!

அப்போது அங்கு கூடியிருந்த ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்சுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பொதுக்குழுவில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்தை வெளியே போக சொல்லி ஈபிஎஸ் ஆதராவளர்கள் முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஓபிஎஸ் வந்த வாகனத்தை உடனடியாக அகற்ற ஈபிஎஸ் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். அத்துடன், ஓபிஎஸ்சை துரோகி என சொல்லி முழக்கங்கள் எழுப்பப்பட்டதால், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அதேபோல், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் துரோகி என பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷமிட்டதால் அவர் மேடையை விட்டு கீழே இறங்கினார். ஈபிஎஸ் வருவதற்கு முன்னதாகவே ஓபிஎஸ் பொதுக்குழு அரங்கிற்கு வந்து விட்டாலும், மேடையிலிருந்தவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு காரணமாக மேடையில் அமராமல் கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். இதையடுத்து, ஈபிஎஸ் மேடையேறியதுமே ஓபிஎஸ் மேடையேறினார்.

அடுத்த செய்தி