ஆப்நகரம்

சகாயம் ஐஏஎஸ்க்கு தீவிர சிகிச்சை: குறையும் இரத்த அழுத்தம்!

சகாயம் உடல்நிலையைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Apr 2021, 10:20 am
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil sagayam ias


ஐஏஎஸ் அதிகாரி சகாயம், விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் அரசியல் பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் சகாயம் தேர்தலில் போட்டியிடவில்லை. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ரேஷன் அட்டை தாரர்களுக்கு 2000 ரூ: கொரோனா நிவாரணம் எப்போது?
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அடித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு ஒவ்வொரு நாளும் பாதிப்பு புதுப்புது உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள், வேட்பாளர்கள் சிலர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சகாயம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 8ஆவது நாளாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவது யார்? உளவுத் துறை சொன்ன தகவல்!

தற்போது அவரது உடலில் ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மருத்துவர்கள் தனிக்குழு அமைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி