ஆப்நகரம்

குஷியில் தமிழகம்- இத்தனை மாவட்டங்களில் கொட்டப் போகும் பெருமழை; வானிலை மையம்

தமிழகத்தில் எங்கெல்லாம் மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 23 Jun 2019, 11:48 am
தென்மேற்குப் பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மத்திய அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல் பகுதியில் அடுத்த 2 முதல் 3 நாள்களில் பருவமழை தீவிரமாக சாதகமான சூழல் உள்ளது.
Samayam Tamil Rain


பருவமழை காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த மழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. தேனி மாவட்டம் போடி, தேவாரம், சங்கராபுரம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

மழை வேண்டி யாகம் செய்த அதிமுகவினர்!

வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாருர், ராமநாதபுரம், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை பொருத்தவரை 104 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.

முன்னதாக சென்னையில் தாம்பரம், அண்ணாநகர், வட சென்னை, அசோக் நகர், எழும்பூர் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது.

எப்படியும் மழை வரப்போகிறது...ஸ்கோர் செய்ய காத்திருக்கும் அமைச்சர்கள்!!

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக மீனம்பாக்கத்தில் 10 மி.மீ மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அடுத்த செய்தி