ஆப்நகரம்

கோவையில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி!

கோவையில் 2 கோடி ரூபாய் செலவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடைபெறவுள்ளது.

Samayam Tamil 25 Oct 2018, 3:35 pm
கோவையில் ஜனவரி 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை 2 கோடி ரூபாய் செலவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil textile exhibition


முதல்வர் பழனிசாமி கடந்த 14.06.2018 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவையில் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் 'ஜவுளித்தொழிலின் வளர்ச்சியை தமிழ்நாட்டில் மேலும் ஊக்குவிக்கும் விதமாக, நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் சார்பாக கோயம்புத்தூரிலுள்ள கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி 2 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்' என்று அறிவித்தார்.

அதன்படி, 2019-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 27 முதல் 29 முடிய மூன்று நாட்கள் கோயம்புத்தூர், கொடிசியா அரங்கத்தில் பிரம்மாண்டமாக பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி நடைபெற உள்ளது. முதல்வர் பழனிசாமி 27.01.2019 அன்று இக்கண்காட்சியினை துவக்கி வைக்கவுள்ளார்கள்.

இக்கண்காட்சிக்கென தமிழ்நாடு அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2019-ம் ஆண்டு ஜனவரி திங்களில் நடைபெறவுள்ள பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சியின் முன்னோட்ட விழா 26.10.2018 அன்று கோயம்புத்தூர் ஹோட்டல் லீமெரிடியனில் சிறப்புற நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையேற்று, விழாவினை துவக்கி வைத்து கண்காட்சி குறும்படத்தினை வெளியிடுகிறார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விழாப்பேருரையாற்றி, கண்காட்சி கையேட்டினை வெளியிட்டு, இணையதளத்தினை துவக்கி வைக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கண்காட்சி சின்னத்தை வெளியிடவுள்ளார்.

அடுத்த செய்தி