ஆப்நகரம்

வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை மடக்கிய ஏட்டு

திருவொற்றியூர் பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடியை போலீஸ் ஏட்டு தனி ஆளாக மடக்கிப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 18 Jul 2016, 11:13 am
திருவொற்றியூர்: திருவொற்றியூர் பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடியை போலீஸ் ஏட்டு தனி ஆளாக மடக்கிப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil intimidate goon involved in robbery
வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை மடக்கிய ஏட்டு


விஸ்வநாதன்(38), திருவொற்றியூர் மார்கெட் பகுதியில் நடந்துச் சென்ற லாரி ஓட்டுனர் பார்த்தசாரதிஇடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.900 பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருன்தாஹ் திருவொற்றியூர் போலீஸ் ஏட்டு விஜயகுமார் ரவுடியை மடக்கிப் பிடித்துள்ளார்.

தப்பிக்க முயன்ற ரவுடி கல்லால் போலீஸ் ஏட்டை காயப்படுத்தியும் தனி ஆளாக நின்று ரவுடியின் சட்டையை பிடித்துக் கொண்ட விஜயகுமார் துணிச்சலுடன் போராடியுள்ளார். இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவொற்றியூர் போலீசார் ரவுடி விஸ்வநாதனை கைது செய்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டபகலில் நடந்த இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி