ஆப்நகரம்

மதுரை சிறையில் நிர்மலாதேவியிடம் விசாரணை

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவியிடம் சந்தானம் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 26 Apr 2018, 12:30 pm
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவியிடம் சந்தானம் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil IMG-20180424-WA0034_15503


ஆளுநரால் நியமிக்கப்பட்ட சந்தானம் குழு மதுரையில் இரண்டாம் கட்ட விசாரணை புதன்கிழமை தொடங்கியது. துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அலுவலர்கள் பணியிடமாற்றம் குறித்தும் விசாரிக்கப்பட்டிருக்கிறது. சிறைத்துறை அனுமதி பெற்று இன்று நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்துகிறது.

இந்நிலையில் இன்று காலை 9.25 மணி அளவில் சந்தானம் குழு மதுரை சிறைக்குச் சென்றது. சந்தானம் ஐஏஎஸ் உடன் சென்ற பெண் விசாரணை அதிகாரிகள் தியாகேஸ்வரி, கமலி ஆகியோரும் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையை பதிவுசெய்ய வீடியோ கேமராமேன் ஒருவரும் அவர்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி