ஆப்நகரம்

தமிழகத்தில் முதலீடு அதிகரிப்பு !

முதலீட்டாளர் மாநாட்டிற்கு பின், தமிழகத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

TNN 21 Jul 2016, 3:55 pm
முதலீட்டாளர் மாநாட்டிற்கு பின், தமிழகத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
Samayam Tamil investments in tamilnadu increased after investors meeting
தமிழகத்தில் முதலீடு அதிகரிப்பு !


சென்னையில், கடந்த ஆண்டு நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதன் பின் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். இதன்விளைவாக இதுவரை, 45,000 கோடி ரூபாய் தொழில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தொழிற்துறை அதிகாரி கூறியது:
முதலீட்டாளர் மாநாட்டின் போது, முதலீடு செய்வதாக தெரிவித்த நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்தினோம். சில நிறுவனங்கள் தங்களது பணிகளை முழுவதாக துவங்கியுள்ளன. இன்னும் சில நிறுவனங்கள் தங்கள் பணிகளைவிரைவில் துவங்க இருப்பதும் தெரியவந்துள்ளது.

தவிர, அவர்களின் தேவை குறித்து கருத்துகள் கேட்கப்படும். எதும் குறை இருக்கும்பட்சத்தில் நிரந்தரமாக அதற்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை, சுமார் 45, 000 கோடி ரூபாய் வரை தொழில் முதலீடு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி