ஆப்நகரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காா்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி சொத்துகள் முடக்கம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Samayam Tamil 29 Mar 2019, 6:55 pm
சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது.
Samayam Tamil Karti Chidambaram


ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்க வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி அளவிற்கு முதலீடுகள் பெறப்பட்டன. இந்த முதலீடுகளை பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதற்காக ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு தொடா்பாக ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் பீடா் முகா்ஜி, இந்திராணி முகா்ஜி உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து காா்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

மேலும் காா்த்தி சிதம்பரத்திற்குச் சொந்தமான ரூ.54 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கி வைத்துள்ளது. இந்நிலையில் காா்த்தி சிதம்பரத்திற்குச் சொந்தமான ரூ.22.28 கோடி சொத்துகளை தற்போது முடக்கம் செய்துள்ளது.


காா்த்தி சிதம்பரம் தற்போது சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

அடுத்த செய்தி