ஆப்நகரம்

காவல்துறையிலும் மாற்றம்: கலக்கும் புதிய முதல்வர்!

தமிழகத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 8 May 2021, 6:54 am
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் நேற்றைய தினமே அதிரடி அறிவிப்புகள், கொரோனா தடுப்பு ஆலோசனைகள் என பம்பரமாக சுழல ஆரம்பித்துவிட்டார்.
Samayam Tamil shankar jiwal


அரசை வழிநடத்த முதல்வருக்கு நான்கு தனிச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமைச்ச் செயலாளாராக ராஜீவ் ரஞ்சனுக்கு பதிலாக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காவல்துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.
முதல் அரசாணை வெளியீடு: சமயம் தமிழ் சொன்னது நடந்தது!
ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியிலும் சில மாற்றங்கள் நடந்துள்ளன. அந்தவகையில் தமிழ்நாடு காவல்துறை உளவுத் துறை ஏடிஜிபியாக கோவை மாநகர கமிஷ்னர் எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கனிமொழியை குஷிப்படுத்திய ஸ்டாலின் - சர்ப்ரைஸ் விசிட்!
சென்னை நகர காவல் துறை ஆணையராக மகேஷ் குமார் அகர்வால் பணியாற்றி வந்த நிலையில் அவருக்குப் பதிலாக ஷங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதுவரை சென்னை ஆயுதப்படை பிரிவின் ஏடிஜிபியாக இருந்தார்.

சென்னை மாநகர சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த ஜெயந்த் முரளிக்கு பதிலாக பி. தாமரைகண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் நாற்காலியில் ஸ்டாலின்: மே மாதம் 2000 ரூ, பால் விலை குறைப்பு!
புதிய முதல்வர், புதிய அமைச்சரவை, புதிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என நிர்வாகம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அடுத்த செய்தி