ஆப்நகரம்

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேரை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

TNN 27 Feb 2016, 5:31 pm
சென்னை: ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேரை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil ips transfer and postings tamil nadu government
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு


வருகிற 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக, தமிழக தேர்தல் ஆணையம் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தொடர்ந்து அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது.

இதனை தொடர்ந்து, தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேரை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, நாகை காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ,டாக்டர் அபிநவ் குமார் சென்னை அடையாறு துணை காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அடையாறு துணை ஆணையராக பணியாற்றிய டி.கண்ணன் நாகை காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி