ஆப்நகரம்

தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டு? கஜானாவை நிரப்ப வேறு வழி இல்லையா?

தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டுக்கு அனுமதியளிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

Samayam Tamil 2 Jul 2021, 12:15 pm
தமிழ்நாட்டின் நிதி நிலைமை எதிர்பார்த்ததையும்விட மிக மோசமாக இருக்கிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். கடந்த ஆட்சியில் அரசின் கடன் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிதி நிலைமையை சரி செய்ய வேண்டிய பெரும்பொறுப்பு தற்போதைய திமுக அரசுக்கு உள்ளது. இதனால் வளர்ச்சித் திட்டங்களும் தடைபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
Samayam Tamil tn lottery


இந்த சூழலில் நிதி நிலைமையை சரி செய்ய லாட்டரி சீட்டை தமிழ்நாட்டில் அனுமதிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

கடந்த மே மாதம் காங்கிரஸ் கட்சியின் எம்.பி கார்த்தி சிதம்பரம், தமிழகத்தில் நிதி வருவாயை பெருக்குவதற்கு தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தமிழ்நாட்டில் குறையும் பாதிப்பு: ஊரடங்கில் இதற்கெல்லாம் அனுமதியா?

சமீபத்தில் மதுரைக்கு வந்திருந்த லாட்டரி அதிபர் மார்ட்டின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது. திமுகவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் மார்டின் பல மாநிலங்களில் லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால் தமிழ்நாட்டின் நிதி நிலைமையை சரி செய்ய மீண்டும் லாட்டரி விற்பனைக்கு அரசு அனுமதியளிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். அண்ணா ஆட்சிக் காலத்தில் 1968ஆம் ஆண்டு நிதி நிலைமையை சரி செய்யவே லாட்டரி கொண்டு வரப்பட்டது. ஆரம்பத்தில் அதற்கு வரவேற்பு இருந்தாலும் மக்களின் பணத்தை பறிப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

2003ஆம் ஆண்டு ஜெயலலிதா லாட்டரிக்கு தடை விதித்தார். லாட்டரி அதிபர்களுடன் ஏற்பட்ட மோதல்போக்கு காரணமாகவே தடை விதிக்கப்பட்டது என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது. அதன்பின்னர் தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டது. ஆனாலும் சட்டவிரோதமாக விற்பனை சத்தமில்லாமல் நடந்துவருகிறது.

கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் வருகிறது. ஆனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அந்த தொகையை தொழில்துறை மூலமாகவோ வேறு ஆக்கப்பூர்வமான பணிகள் மூலமாகவோ எளிதாக ஈட்டலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளி திறப்பு: அரசுக்கு புதிய கோரிக்கை!
ஏற்கெனவே டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் பெறும் வருவாயை அரசு பெரியளவில் நம்பியுள்ளது. பல குடும்பங்களை சீரழித்து வரும் வருவாயில் தான் அரசு இயந்திரம் செயல்படுகிறது என்பது வெட்கக்கேடான ஒன்று. அதேபோல் லாட்டரி விற்பனைக்கு அனுமதி கொடுப்பதும், அரசு நடத்துவதும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்கிறார்கள். தமிழ்நாடு அரசுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதை ஆரம்பத்திலேயே கைவிட்டுவிடவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

அடுத்த செய்தி