ஆப்நகரம்

சசிகலாவுக்கு முன்னால் சுதாகரன் விடுதலை?

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சுதாகரன் அளித்த மனுவுக்கு பதில் வரப்போகிறது.

Samayam Tamil 21 Dec 2020, 1:02 pm
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அபராதத் தொகையை செலுத்தியுள்ளனர்.
Samayam Tamil sasikala


சிறை நன்னடத்தை விதிகள் அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய அவரது தரப்பு வழக்கறிஞர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் சசிகலா முன்கூட்டியே வெளிவருவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என பெங்களூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சுதாகரன் வழக்கறிஞர்கள், வழக்கு நடந்தபோது ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்த காலங்களை கழித்து முன் கூட்டியே அவரை விடுவிக்கவேண்டும் என்று சிறைத் துறைக்கும், உள் துறைக்கும் மனு அனுப்பினர். இந்த மனுவுக்கு இன்று டிசம்பர் 21ஆம் தேதி பதில் அனுப்பப்பட உள்ளது.

ஜனவரியில் சசிகலாவுக்கு காத்திருக்கும் ஷாக்: இதை மறந்துட்டீங்களே!

அந்த பதில் சிறைத்துறைக்கு இன்றோ, நாளையோ கிடைக்கலாம் என பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரோஜாவை திட்டம் போட்டு கடத்திய அனு… என்னமா பிளான் பண்றா… முடியலடா சாமி!

அதன்பிறகு சிறைத் துறை சுதாகரன் விடுதலை குறித்து முடிவெடுக்க உள்ளது. இதில் சுதாகரனை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படியில்லை என்றால் ஏன் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்பதற்கான சரியான காரணம் அந்த கடிதத்தில் குறிப்பிடப்படும் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி