ஆப்நகரம்

காவிரியை விட உங்களுக்கு மெரினா தான் முக்கியமா - அரசை சரமாரியாக கேட்ட நீதிமன்றம்

காவிரி விவகாரத்தைவிட மெரினாதான் தமிழக அரசுக்கு முக்கியமா, ஏன் போராட அனுமதியில்ல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி கேட்டுள்ளது.

Samayam Tamil 24 Apr 2018, 6:40 pm
சென்னை : காவிரி விவகாரத்தைவிட மெரினாதான் தமிழக அரசுக்கு முக்கியமா, ஏன் போராட அனுமதியில்ல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி கேட்டுள்ளது.
Samayam Tamil madras-HC.


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மெரினாவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி போராடினர். இதைத் தொடர்ந்து பல விஷயங்களுக்காக மெரினாவில் போராட நினைத்தாலும் அரசு மெரினாவில் போராட தடை வித்தது. இது குறித்து தற்போது அரசுக்கு நீதிமன்றம் பல கேள்விகளை கேட்டுள்ளது.

அரசுக்கு சரமாரி கேள்வி:
போராட்டத்தை ஒழுங்கு படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, போராட்டத்தை தடுக்க அதிகாரமில்லை.
வைகுண்ட ஏகாதேசி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் விழாவின் போது கூட்டத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை என கூறமுடியும். பண்டிகையை கொண்டாடக்கூடாது என மக்களை தடுக்க முடியுமா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறூத்தி மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதிகோரும் அய்யாகண்ணு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைபு

இந்த வழக்கு குறித்து அரசு தெரிவிக்கையில் 2013 முதல் மெரினாவில் போராட்டம் நடத்த அரசு அனுமதிப்பதில்லை என கூறியுள்ளது.

அடுத்த செய்தி