ஆப்நகரம்

தமிழருவி மணியன் அடித்த பல்டி: ரஜினி மக்கள் மன்றம், காந்திய மக்கள் இயக்கம் இணைகிறதா?

ரஜினி மக்கள் மன்றமும், காந்திய மக்கள் இயக்கமும் இணையவுள்ளதாக வந்த தகவல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Jan 2021, 6:57 am
ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட நிலையிலும் அவரது ரசிகர்கள் சிலர் எப்படியாவது கட்சி தொடங்கிவிடமாட்டாரா என எதிர்பார்த்துள்ளனர்.
Samayam Tamil rajinikanth


அரசியலில் ஈடுபட்டால் மட்டுமல்ல அரசியல் தொடர்பான செய்திகளைப் பார்த்தாலே ரஜினியின் ரத்த அழுத்தம் உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் இதிலிருந்து முற்றிலும் ஒதுங்கியிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ரஜினி ரசிகர்களோ நேற்று வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

அதே சமயம் கோவையில் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் 37 வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த 85 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் தலைவராக தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் முக்கிய பதவிகளுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனிப்பான செய்தி; தமிழக முதல்வரின் அதிரடி!
காந்திய மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களை அடுத்த ஆறு மாதத்தில் 10 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கம் இணைக்கப்படவுள்ளதாக வந்த செய்தியை காந்திய மக்கள் இயக்கம் மறுத்துள்ளது. இது தொடர்பாக அதன் பொதுச் செயலாளர் பா.குமரய்யா வெளியிட்ட அறிக்கையில், “சில செய்தி காட்சி ஊடகங்களில் காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக வந்த செய்தி கற்பனையானது. காந்திய இயக்கம் தனித்து இயங்கும். ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கத்தின் தொடர்பு சகோதர பாவத்துடன் நீடிக்கும்” என தெரிவித்துள்ளார்.

ரஜினி பின்வாங்கிய பிறகு இனி இறக்கும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன் என சொன்ன தமிழருவி மணியன் மீண்டும் தனது இயக்கப் பணிகளை தொடங்கியிருப்பது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

அடுத்த செய்தி