ஆப்நகரம்

ஸ்டாலின் டிக் அடித்த அதிகாரி பெயர்: அடுத்த தலைமை செயலாளர் யார்?

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள அதிகாரி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 4 May 2023, 11:41 am
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் இறையன்பு ஐஏஎஸ் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பது தொடர்பாக மேல்மட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் நடந்துள்ளன. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொண்டு வரும் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுவதற்கும், அரசு இயந்திரம் வேகம் குறையாமல் சீராக இயங்குவதற்கும் யார் பொருத்தமாக இருப்பார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது என்கிறார்கள்.
Samayam Tamil next cs in tamil nadu


இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பது குறித்த விவாதம் நடந்து வருகிறது. அதில் சிவதாஸ் மீனா, அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், கார்த்திகேயன் போன்ற பெயர்கள் அடிபட்டன. இதில் சிவதாஸ் மீனா பெயர் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.

சிவதாஸ் மீனா 1989ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். இவரது பூர்வீகம் ராஜஸ்தான். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் எஞ்சினியரிங் படித்தவர். ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்டவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களில் ஒருவராக பணியாற்றினார். டெல்லியில் ஒன்றிய அரசு அதிகாரியாக பணியாற்றிய இவர் 2021இல் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன் தமிழ்நாடு அழைத்து வரப்பட்டார்.

ஓபிஎஸ்ஸை கைவிட்ட டெல்லி - உடனே எடப்பாடிக்கு அனுப்பிய தூது: சண்டைக்காரன் கால்லயே விழுந்துரலாம்?

நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளராக பணியாற்றும் சிவதாஸ் மீனா ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். அதிகாரிகளை, அரசு ஊழியர்களை கடுமையாக வேலை வாங்கக்கூடியவர் இவர் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். இதனால் அனைத்து துறைகளின் பணிகளும் வேகம் குறையாமல் விரைவாக நடைபெறும் என்கிறார்கள்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுன்டேசன்: அமைச்சர் உதயநிதி நடத்திய கலந்துரையாடல்!
பதவி ஓய்வு பெற்ற பின்னர் தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்புவை வீட்டுக்கு அனுப்பும் எண்ணம் இல்லையாம். தமிழக அரசில் முக்கிய பணி ஒன்றை அவருக்கு வழங்கி அவரது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அந்த வகையில் தலைமை தகவல் ஆணையர் பதவி, அல்லது டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி இவற்றில் ஏதேனும் ஒன்று அவருக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி