தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று ஒரு தரப்பும், சித்திரை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று மற்றொரு தரப்பும் இன்றளவும் வாதிட்டு வருகின்றனர். ஒரு இனத்துக்கான அடையாள சிக்கல் என்பதால், நூற்றாண்டுகளாகத் இப்பிரச்சினை தொடர்கிறது. 1969ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது பொங்கலுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று அறிவித்து அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். அதன்பின்னர் 1971ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறையை தமிழக அரசு ஏற்கும் என அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தினார். இது தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், தமிழ்நாடு அரசு இதழிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 1989ஆம் ஆண்டு மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கவிருப்பதாக பேசத் தொடங்கினார். அதன்பின்னர், 2008 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஜனவரி 29ஆம் தேதி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில், சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாள் என்று அறிவித்தார்.
இந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், சித்திரை 1ஆம் தேதியான ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என குறிப்பிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் தொட்டு திமுகவினர் தொடர்ந்து தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். 10 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக, தொடர்ந்து மாநில உரிமைகளையும், திராவிட சித்தாந்தங்களையும் தூக்கி பிடித்து வருகிறது. ஒவ்வொரு விஷயத்திலும் ஸ்டாலின் அதனை முன்னிறுத்தி வருகிறார். முன்னதாக தமிழ்நாடு நாள் தொடர்பான சர்ச்சை எழுந்த நிலையில், தற்போதைய தமிழக அரசின் இந்த அறிவிப்பு திமுகவினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரத் தகவல்களிடம் விசாரிக்கையில், “திமுக ஆட்சியில் இருந்த போது கருணாநிதி கொண்டு வந்த சட்டத்தை, அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா ரத்து செய்து சித்திரை 1ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக மாற்றினார். கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியிலும் இந்த சட்டமே அமலில் இருந்தது. அரசிதழில் வெளியிடப்பட்ட சட்டத்தின்படி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு நாளாக அறிவித்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.
தை முதல் நாள் தமிழ் புத்தாண்டில் ஸ்டாலினின் நிலைப்பாடு மாறிவிட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்கள், வருகிற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நடைமுறையில் உள்ள சட்டத்தை ரத்து செய்யும் விதமாகவும், மீண்டும் தை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக அறிவிக்க வழிவகை செய்யும் புதிய சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருவார் என்றனர்.
இதனைத்தொடர்ந்து 1989ஆம் ஆண்டு மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கவிருப்பதாக பேசத் தொடங்கினார். அதன்பின்னர், 2008 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஜனவரி 29ஆம் தேதி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில், சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாள் என்று அறிவித்தார்.
இந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், சித்திரை 1ஆம் தேதியான ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என குறிப்பிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் தொட்டு திமுகவினர் தொடர்ந்து தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். 10 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக, தொடர்ந்து மாநில உரிமைகளையும், திராவிட சித்தாந்தங்களையும் தூக்கி பிடித்து வருகிறது. ஒவ்வொரு விஷயத்திலும் ஸ்டாலின் அதனை முன்னிறுத்தி வருகிறார். முன்னதாக தமிழ்நாடு நாள் தொடர்பான சர்ச்சை எழுந்த நிலையில், தற்போதைய தமிழக அரசின் இந்த அறிவிப்பு திமுகவினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரத் தகவல்களிடம் விசாரிக்கையில், “திமுக ஆட்சியில் இருந்த போது கருணாநிதி கொண்டு வந்த சட்டத்தை, அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா ரத்து செய்து சித்திரை 1ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக மாற்றினார். கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியிலும் இந்த சட்டமே அமலில் இருந்தது. அரசிதழில் வெளியிடப்பட்ட சட்டத்தின்படி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு நாளாக அறிவித்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.
தை முதல் நாள் தமிழ் புத்தாண்டில் ஸ்டாலினின் நிலைப்பாடு மாறிவிட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்கள், வருகிற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நடைமுறையில் உள்ள சட்டத்தை ரத்து செய்யும் விதமாகவும், மீண்டும் தை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக அறிவிக்க வழிவகை செய்யும் புதிய சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருவார் என்றனர்.