ஆப்நகரம்

தமிழர்களுக்கு ரயில்வே பணியில் ஏப்பம்...தொடரும் பரிதாபங்கள்...!!

மதுரை ரயில்வே கோட்டத்தில் இருப்புப்பாதை தொடர்பான பணிகளுக்கு வடமாநிலத்தவர்கள்தான் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழர்களுக்கு வாய்ப்பு இல்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

Samayam Tamil 19 Sep 2019, 10:48 am
தமிழக ரயில்வேயில் அதிகளவில் வடமாநிலத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வரும் நிலையில், தற்போது, மதுரை ரயில்வே கோட்டத்தில் இருப்புப்பாதை பணிகளுக்கு வடமாநிலத்தவர்கள் அதிகளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil Railway 2


தமிழகத்தில் இருமொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கை குறித்து விவாதம் தினமும் சென்று கொண்டு இருக்கிறது. மறுபக்கம் தமிழத்தில் இருக்கும் மத்திய அரசு பணிகளில் குறிப்பாக ரயில்வேயில் வடமாநிலத்தவர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதற்கு குறிப்பாக மக்கள் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல் முருகன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் போன்றவர்கள்தான் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை கோட்டத்தில் இருப்புப்பாதை தொடர்பான பணிகளுக்கான தேர்வில் அதிகளவில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு ஆகி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு செப்டம்பர் 17ஆம் தேதி மதுரை கோட்டத்தில் இருப்புப்பாதை தொடர்பான 572 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் அதிகளவில் வடமாநிலத்திவர்கள் தேர்வாகி முதல் இடத்தில் உள்ளனர். 2ஆம் இடத்தில் கேரளா உள்ளது. அந்த மாநிலத்தை சார்ந்தவர்களுக்கும் அதிகளவில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் வெறும் 20 பேருக்கும் குறைவானவர்களுக்கே வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வாங்க வாங்க.. மத்திய அரசு வேலை.. LIC -இல் உதவியாளர் பணிக்கு 8 ஆயிரம் காலியிடங்கள்..!

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இந்த தேர்வை எழுதவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தேர்வு எழுதிய தமிழர்களில் அந்தந்த மாநில வேலைவாய்ப்பு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.

சென்னை மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை!

மத்திய ரயில்வே இதற்கு செவி சாய்க்குமா? ஏற்கனவே ரயில்வே பணியில் வடமாநிலத்தவர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர் கதையாகி வருகிறது. தமிழக அரசியல் கட்சிகளும் வேலை வாய்ப்பு முன்னுரிமைகளில் தலையிட்டு, தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தர போராட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அடுத்த செய்தி