சென்னை: ஜெகத்ரட்சகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை நடவடிக்கை அரசியல் காரணமா என்ற சந்தேகம் எழுகிறது என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறைக்கு வந்த புகாரையடுத்து இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது. ஜெகத்ரட்சகனின் வீடுகள், அலுவலகம், அவருக்கு சொந்தமான மதுபான ஆலைகள், மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 40 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஜெகத்ரட்சகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை நடவடிக்கை அரசியல் காரணமா என்ற சந்தேகம் எழுகிறது என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரித்துறையினர் ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதையோ, அல்லது விசாரணை நடத்துவதையோ தவறு என்று கூறவில்லை. ஆனால், ஜெகத்ரட்சகன் தொடர்புடைய ஏறத்தாழ 40 இடங்களில் சோதனை மேற்கொள்வதாகக் கூறி அனைத்து இடங்களிலும் அதிகாரி களை அனுப்பிய பிறகும் கடந்த மூன்று நாட்களாக ஜெகத்ரட்சகன் அவர்களை, அவருடைய உடல் நிலையைக் கூட கருத்தில் கொள்ளாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பான வகையில், ஒருவருடைய அன்றாடச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதாகும். வருமான வரித் துறையினரின் இத்த கைய நடவடிக்கைக்கு அரசியல் காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
திரு.ஜெகத்ரட்சகன் அவர்கள் இல்லத்தில் கடந்த மூன்று தினங்களாக வருமான வரித் துறையினரின் நடவடிக்கைக்கு அரசியல் (cont) https://t.co/pEYqJ0D8Tm — KalaignarKarunanidhi (@kalaignar89) July 15, 2016
கடந்த 3 நாட்களாக இரவு பகல் பாராமல் வீட்டில் கைதி போல் அடைத்து வைத்திருக்கும் வருமான வரித்துறையினரின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் திமுக தலைவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரி செலுத்த மத்திய அரசு காலக்கெடு அளித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள கருணாநிதி, வருமான வரித் துறையினரின் நடவடிக்கை வியப்பளிப்பதாக தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறைக்கு வந்த புகாரையடுத்து இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது. ஜெகத்ரட்சகனின் வீடுகள், அலுவலகம், அவருக்கு சொந்தமான மதுபான ஆலைகள், மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 40 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஜெகத்ரட்சகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை நடவடிக்கை அரசியல் காரணமா என்ற சந்தேகம் எழுகிறது என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரித்துறையினர் ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதையோ, அல்லது விசாரணை நடத்துவதையோ தவறு என்று கூறவில்லை. ஆனால், ஜெகத்ரட்சகன் தொடர்புடைய ஏறத்தாழ 40 இடங்களில் சோதனை மேற்கொள்வதாகக் கூறி அனைத்து இடங்களிலும் அதிகாரி களை அனுப்பிய பிறகும் கடந்த மூன்று நாட்களாக ஜெகத்ரட்சகன் அவர்களை, அவருடைய உடல் நிலையைக் கூட கருத்தில் கொள்ளாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பான வகையில், ஒருவருடைய அன்றாடச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதாகும். வருமான வரித் துறையினரின் இத்த கைய நடவடிக்கைக்கு அரசியல் காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
திரு.ஜெகத்ரட்சகன் அவர்கள் இல்லத்தில் கடந்த மூன்று தினங்களாக வருமான வரித் துறையினரின் நடவடிக்கைக்கு அரசியல் (cont) https://t.co/pEYqJ0D8Tm — KalaignarKarunanidhi (@kalaignar89) July 15, 2016
கடந்த 3 நாட்களாக இரவு பகல் பாராமல் வீட்டில் கைதி போல் அடைத்து வைத்திருக்கும் வருமான வரித்துறையினரின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் திமுக தலைவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரி செலுத்த மத்திய அரசு காலக்கெடு அளித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள கருணாநிதி, வருமான வரித் துறையினரின் நடவடிக்கை வியப்பளிப்பதாக தெரிவித்துள்ளார்.