செயற்கை மழையை ஏற்படுத்த திட்டம் உள்ளதா என்பது குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் எனபவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார், அதில்" தமிழகத்தில் நிலத்தடி நீர் 1000 அடிக்கும் கீழ் குறைந்து கொண்டு இருக்கிறது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளார்கள்.மேலும் வெயில் காலம் வர இருக்கும் நிலையில் மக்கள் மட்டுமின்றி கால்நடைகள் மற்றும் பறவைகளும் தண்ணீர் இல்லாமல் உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம்.
மேலும் டெல்டா பகுதியான தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் தற்போது நிலத்தடி நீர் குறைத்து கொடு இருக்கும் நிலை ஏற்படுகிறது. தமிழ் நாட்டில் போதிய பருவமழை இல்லாத காரணத்தினால், விவசாயிகள் ,விவசாயத்திற்கு வாங்கிய கடனை கட்ட இயலாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.இந்த நிலை தற்போதும் தொடர்ந்து கொண்டுயிருக்கிறது.
மேலும் தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளில் அதன் கொள்ளளவை விட தற்போது மிக குறைவான நீர் மட்டுமே இருக்கிறது.NITI என்கிற தனியார் அமைப்பின் ஆராய்ச்சியில், 2020 ம் ஆண்டு தமிழகத்தில்கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து கடந்த மார்ச் 16 ம் தேதி உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன்.ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுகவில்லை.எனவே தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும்,போர் கால அடிப்படையில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவும்,மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிதண்ணீர் வழங்க மாவட்ட ஆட்சியர்,மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றிக்கை அனுப்பவும்,தண்ணீர் தட்டபாடு குறித்தும்,சேமிப்பு குறித்தும் மக்களுக்கு டி. வி. மற்றும் பத்திரிக்கைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" எனகூறியிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு மரங்கள் அனைத்தையும் வெட்டி,நீர்நிலைகளையும் ஆக்கிரமித்த நிலையில்,செய்ய செயற்கை மழையை நாடும் நிலை உள்ளது. ஆகவே, செயற்கை மழையை ஏற்படுத்த திட்டம் ஏதும் உள்ளதா?குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 10 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் எனபவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார், அதில்" தமிழகத்தில் நிலத்தடி நீர் 1000 அடிக்கும் கீழ் குறைந்து கொண்டு இருக்கிறது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளார்கள்.மேலும் வெயில் காலம் வர இருக்கும் நிலையில் மக்கள் மட்டுமின்றி கால்நடைகள் மற்றும் பறவைகளும் தண்ணீர் இல்லாமல் உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம்.
மேலும் டெல்டா பகுதியான தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் தற்போது நிலத்தடி நீர் குறைத்து கொடு இருக்கும் நிலை ஏற்படுகிறது. தமிழ் நாட்டில் போதிய பருவமழை இல்லாத காரணத்தினால், விவசாயிகள் ,விவசாயத்திற்கு வாங்கிய கடனை கட்ட இயலாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.இந்த நிலை தற்போதும் தொடர்ந்து கொண்டுயிருக்கிறது.
மேலும் தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளில் அதன் கொள்ளளவை விட தற்போது மிக குறைவான நீர் மட்டுமே இருக்கிறது.NITI என்கிற தனியார் அமைப்பின் ஆராய்ச்சியில், 2020 ம் ஆண்டு தமிழகத்தில்கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து கடந்த மார்ச் 16 ம் தேதி உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன்.ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுகவில்லை.எனவே தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும்,போர் கால அடிப்படையில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவும்,மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிதண்ணீர் வழங்க மாவட்ட ஆட்சியர்,மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றிக்கை அனுப்பவும்,தண்ணீர் தட்டபாடு குறித்தும்,சேமிப்பு குறித்தும் மக்களுக்கு டி. வி. மற்றும் பத்திரிக்கைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" எனகூறியிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு மரங்கள் அனைத்தையும் வெட்டி,நீர்நிலைகளையும் ஆக்கிரமித்த நிலையில்,செய்ய செயற்கை மழையை நாடும் நிலை உள்ளது. ஆகவே, செயற்கை மழையை ஏற்படுத்த திட்டம் ஏதும் உள்ளதா?குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 10 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.