ஆப்நகரம்

இது ஜனநாயக நாடா? காவல் துறையின் சா்வாதிகார நாடா? நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஹரிராகவன் என்பவரது மனைவி தொடா்ந்த வழக்கில் உயா்நீதிமன்ற மதுரை கிளை இது ஜனநாயகா நாடா? காவல்துறையின் சா்வாதிகார நாடா? என்று கேள்வி எழுப்பி உள்ளது.

Samayam Tamil 31 Jul 2018, 1:59 pm
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஹரிராகவன் என்பவரது மனைவி தொடா்ந்த வழக்கில் உயா்நீதிமன்ற மதுரை கிளை இது ஜனநாயகா நாடா? காவல்துறையின் சா்வாதிகார நாடா? என்று கேள்வி எழுப்பி உள்ளது.
Samayam Tamil Madurai Highcourt 123


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 22ம் தேதி மாவட்ட மக்கள ஒன்றிணைந்து ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக ஆட்சியரை சந்தித்து மனு வழங்க சென்றனா். அப்போது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 போ் கொல்லப்பட்டனா்.

இதில் பொதுமக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சோ்ந்த ஹரிராகவன் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனா். இதனைத் தொடா்ந்து ஹரிராகவன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தாா். இதனைத் தொடா்ந்து கடந்த 24ம் தேதி ஹரிராகவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீன் பெற்ற பின்னா் ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இது சட்ட விரோதமானது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது மனைவி சத்திய பாமா உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தாா்.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாணையின் போது, மனுதாரர் சாா்பில் மனுதாரரின் கணவருக்கு ஸ்டொ்லைட் வழக்கில் கடந்த 24ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் 26ம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

ஸ்டொ்லைட் வழக்கில் தற்போது வரை 90 பேருக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்துள்ளோம். ஆனால் அவா்கள் அடுத்தடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனா். காவல்துறையினா் செயல்பாடு சட்டத்திற்கு விரோதமானது என்றாா். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இது ஜனநாயக நாடா? அல்லது காவல்துறையினரின் அதிகாரத்திற்கு உட்பட்ட சா்வாதிகார நாடா? என்று கேள்வி எழுப்பினா். மேலும் இந்த வழக்கு தொடா்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி