ஆப்நகரம்

ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ்: இதுதான் காரணமா?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்தித்துப் பேசவுள்ளார்.

Samayam Tamil 5 Oct 2020, 6:10 am
தமிழக அரசியல் களத்தில் குறிப்பாக அதிமுகவுக்குள் சூடான விவாதங்கள் அரங்கேறி வருகின்றன. முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி அக்கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு அணிகளும் அதற்கு போட்டிப்போடுகின்றன.
Samayam Tamil eps


துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெரியகுளத்தில் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அமைச்சர்கள், நிர்வாகிகள் சிலர் தொடர்ந்து அங்கு சென்று பேசி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநர் மாளிகையில் இன்று மாலை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆளுநரிடம் முதல்வர் எடுத்துரைப்பார் என கூறப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி, மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரோடு முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஆளுநரிடம் விளக்குவார் என கூறப்படுகிறது.

தமிழச்சி தங்கபாண்டியன் தாயார் மறைவு: ஸ்டாலின், ஓபிஎஸ் இரங்கல்!

இந்த சந்திப்பில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை குறித்தும் முதல்வர் ஆளுநரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வார் என தெரிகிறது.

ஓபிஎஸ்க்கு சர்ப்ரைஸ் தந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்..! என்ன நடக்கிறது பண்ணை வீட்டில்?

முழுக்க தமிழக அரசு தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக கூறப்பட்டாலும் அரசியல் பேச்சுகளுக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அடுத்த செய்தி