திமுக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடையும் நிலையில் இன்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் திட்டம் மூலம் ஏராளமானோர் பயனடைந்துள்ளதாக முதல்வர் கூறினார். முன்னதாக இன்று சென்னையில் 29சி பேருந்தில் பயணம் மேற்கொண்டு மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்று தேர் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கான நிவாரணத் தொகையையும் வழங்கினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “களிமேடு தேர் விபத்தில் இறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களில் வீடு இல்லாமல் யாராவது இருந்தால் அவர்களுக்கு அரசே வீடு வழங்க வேண்டும். இறந்த குடும்பத் தலைவர்களின் வாரிசுகள் கல்விச் செலவை முழுமையாக அரசு ஏற்க வேண்டும்.
தேர் செல்லும் பாதையில் சாலைகள் மேடு பள்ளங்கள் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. தேரோட்டம் முடியும் வரை மின் இணைப்பை துண்டித்திருக்க வேண்டும். இந்த விபத்தின்போது கவனக்குறைவாக இருந்த அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்து குறித்து அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் குழு பாகுபாடில்லாமல் விசாரிக்க வேண்டும்.
திமுக ஓராண்டு ஆட்சி என்பது தோல்வி அடைந்துள்ளது. எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. திமுக ஓராண்டு ஆட்சி பாஸ் மார்க் வாங்க வில்லை. பெயில் மார்க் தான் வாங்கியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் அரசுப் பேருந்தில் பயணம் செய்வது என்பது உலக மகா சாதனை அல்ல. தமிழகத்தில் திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மின்வெட்டு வரும் என்பது கடந்த கால வரலாறு” என்று கூறினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்று தேர் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கான நிவாரணத் தொகையையும் வழங்கினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “களிமேடு தேர் விபத்தில் இறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களில் வீடு இல்லாமல் யாராவது இருந்தால் அவர்களுக்கு அரசே வீடு வழங்க வேண்டும். இறந்த குடும்பத் தலைவர்களின் வாரிசுகள் கல்விச் செலவை முழுமையாக அரசு ஏற்க வேண்டும்.
தேர் செல்லும் பாதையில் சாலைகள் மேடு பள்ளங்கள் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. தேரோட்டம் முடியும் வரை மின் இணைப்பை துண்டித்திருக்க வேண்டும். இந்த விபத்தின்போது கவனக்குறைவாக இருந்த அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்து குறித்து அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் குழு பாகுபாடில்லாமல் விசாரிக்க வேண்டும்.
திமுக ஓராண்டு ஆட்சி என்பது தோல்வி அடைந்துள்ளது. எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. திமுக ஓராண்டு ஆட்சி பாஸ் மார்க் வாங்க வில்லை. பெயில் மார்க் தான் வாங்கியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் அரசுப் பேருந்தில் பயணம் செய்வது என்பது உலக மகா சாதனை அல்ல. தமிழகத்தில் திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மின்வெட்டு வரும் என்பது கடந்த கால வரலாறு” என்று கூறினார்.