ஆப்நகரம்

Maha Shivaratri 2019: ஈஷா மைய சிவராத்திரி விழாவில் உயிரிழந்தால் வனத்துறை பொறுப்பல்ல

கோவை ஈஷா மையத்தில் மகாசிவராத்திரி விழாவின் போது ஏதேனும் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பள்ள என தமிழ்நாடு வனத்துறை கைவிரித்துள்ளது.

Samayam Tamil 4 Mar 2019, 10:40 pm
கோவை ஈஷா மையத்தில் மகாசிவராத்திரி விழாவின் போது ஏதேனும் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பள்ள என தமிழ்நாடு வனத்துறை கைவிரித்துள்ளது.
Samayam Tamil isha yoga


ஈஷா மையம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி தினத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தப்படுவது வழக்கம். சிவராத்திரி தினத்தன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கமாக வைத்துள்ளது. இதில் பல்வேறு முன்னனி கலைஞர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

வனத்துறை அதிரடி:
இந்நிலையில் வனத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆதி யோகி சிலை அருகே நடத்தப்படும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியின் போது வன விலங்குகளால் பக்தர்களின் உயிருக்கோ, உடமைக்கோ சேதம் ஏற்பட்டால் வனத்துறை பொறுப்பல்ல என்று போலாம்பட்டி வனத்துறை அறிவித்துள்ளது.

மேலும் யாரேனும் வனவிலங்குகளால் இறக்க நேர்ந்தால் வனப்பகுதி என்பதால் அரசின் நிவாரணத் தொகை கூட கிடைக்காது. அப்பகுதியில் பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி