ஆப்நகரம்

பெண்களுக்கு மூளைச்சலவை-ஈஷா மையம் மீது தொடரும் புகார்..!

தங்கள் பெண்கள் இருவரை மூளைச்சலவை செய்து சன்னியாசி ஆக்கிவிட்டதாக ஈஷா மையத்தின் மீது பெண்களின் பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நிலையில்,தாங்கள் முழு விருப்பத்துடன் இந்த முடிவை எடுத்ததாக அந்த இரண்டு பெண்கள் பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 3 Aug 2016, 4:40 pm
தங்கள் பெண்கள் இருவரை மூளைச்சலவை செய்து சன்னியாசி ஆக்கிவிட்டதாக ஈஷா மையத்தின் மீது பெண்களின் பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நிலையில்,தாங்கள் முழு விருப்பத்துடன் இந்த முடிவை எடுத்ததாக அந்த இரண்டு பெண்கள் பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil isha yoga centre accused by retired professor
பெண்களுக்கு மூளைச்சலவை-ஈஷா மையம் மீது தொடரும் புகார்..!


தங்கள் இரண்டு மகள்களையும் மூளைச்சலவை செய்து சன்னியாசி ஆக்கிவிட்டதாக ஈஷா மையத்தின் மீது ஓய்வு பெற்ற பேராசிரியரான காமராஜ் என்பவர் கடந்த திங்களன்று புகார் அளித்திருந்தார்.கீதா,லதா என்ற தனது இரண்டு மகள்களையும் சன்னியாசம் என்ற பெயர் ஈஷா மையத்தினர் மொட்டை அடித்து கொடுமைபடுத்தியிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் முழு விருப்பத்தோடுதான் சந்நியாசிகள் ஆனதாக கீதா,லதா ஆகியோர் விளக்கமளிக்கும் வீடியோ பதிவு ஒன்றை ஈஷா மையத்தினர் வெளியிட்டுள்ளனர்.ஆனால் இதனை மறுத்துள்ள பெண்களின் பெற்றோர்,ஈஷா மையத்தினர் கட்டாயத்தினால்தான் தங்கள் பெண்கள் இப்படி பேசுவதாகவும்,ஈஷா மையத்தில் தங்கள் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஈஷா மையத்தில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்,ஈஷா மையத்தில் உள்ள பெண்களின் ரத்தம்,அவர்களுக்கு அளிக்கப்படும் உணவு,தீர்த்தம் ஆகியவற்றை சோதனை செய்து பார்க்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி