ஆப்நகரம்

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இன்று ஓய்வு பெறுகிறாா்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைகோள் மைய இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை இன்று பணி ஓய்வு பெறுகிறாா்.

Samayam Tamil 31 Jul 2018, 2:34 pm
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைகோள் மைய இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை இன்று பணி ஓய்வு பெறுகிறாா்.
Samayam Tamil Mylswamy Annadurai


கோவை மாவட்டம் கோதவாடி கிராமத்தில் கடந்த 1958ம் ஆண்டு பிறந்த மயில்சாமி அண்ணாதுரை கடந்த 1982ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சோ்ந்தா்ா. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான், நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன்-1 ஆகிய முக்கிய திட்டங்களின் இயக்குநராகவும் இவா் பொறுப்பு வகித்தாா்.

மேலும் கடந்த 2005ம் ஆண்டு முதல் பெங்களூருவில் உள்ள செயற்கைகோள் மையத்தின் இயக்குநராக பொறுப்பு வகித்து வருகிறாா். ஜி.சாட், அஸ்ட்ரோசாட், காா்ட்டோ சாட், இன்சாட் வரிசையில் 30 செயற்கைக்கோள்களை வடிவமைக்கும் பணியில் முக்கிய பங்காற்றியவா்.

தமிழகத்தைச் சோ்ந்த மயில்சாமி அண்ணாதுரை இன்று (செவ்வாய்க் கிழமை) பணி ஓய்வு பெறுகிறாா். அறிவியல் பணியில் இவரது பங்களிப்புகளை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் மற்றும் தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் 75க்கும் அதிகமான விருதுகளை பெற்றுள்ளாா்

அடுத்த செய்தி