ஆப்நகரம்

#ISupportJallikattu: மதுரையில் பிஎஸ்என்எல் கட்டிடத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி

மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இளைஞர் ஒருவர் பிஎஸ்என்எல் கட்டிடத்தின் மேலே ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

TNN 18 Jan 2017, 5:26 pm
மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இளைஞர் ஒருவர் பிஎஸ்என்எல் கட்டிடத்தின் மேலே ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil isupportjallikattu youth attempted for suicide in madurai
#ISupportJallikattu: மதுரையில் பிஎஸ்என்எல் கட்டிடத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி


தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, மாணவர்களும், இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன் ஒருபகுதியாக, மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, ஜல்லிக்கட்டு ஆதரவாகப் போராடி வருகின்றனர்.

இன்றைய போராட்டத்தின் இடையே, இளைஞர் ஒருவர் திடீரென தமுக்கம் மைதானம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகக் கட்டிடத்தின் மீது ஏறி, தற்கொலை செய்வதாக, முழக்கமிட்டார். ஜல்லிக்கட்டு தடையை உடனே நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையடுத்து, சக போராட்டக்காரர்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்திய பின் பத்திரமாக தரையிறக்கினர். இச்சம்பவம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Jallikattu protest: Youth attempted for suicide in Tamukkam ground, Madurai.

அடுத்த செய்தி