ஆப்நகரம்

திருச்சி போலீஸை சிறை பிடித்த ராஜஸ்தான் போலீஸ்? லஞ்சம் பெற்றதாக புகார்?

தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 12 பேரை ராஜஸ்தான் காவல் துறையினர் சிறை பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 6 Mar 2023, 12:58 pm
Samayam Tamil tn police
திருச்சி மாநகர காவல்துறையைச் சேர்ந்த 12 பேர் ராஜஸ்தான் காவல் துறையால் லஞ்சப் புகார் காரணமாக சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சியில் திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தானைச் சேர்ந்த சோனியா என்ற பெண்ணையும் பன்னாலால் என்ற அவரது கணவரையும் திருச்சி போலீஸார் தேடி வந்தனர்.

திருட்டு கும்பலை தேடி திருச்சியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் 12 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் விரைந்தது. ஹஜ்மர் நகரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லிக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி: அண்ணாமலைக்கு பிரஷர் - இனிமேல் இப்படி தானா?

இந்நிலையில் அந்த தம்பதி ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புத்துறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனிப்படை போலீஸார் மீது புகார் ஒன்றை அளித்துள்ளது. அதில் திருட்டு வழக்கு தொடர்பாக 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக புகாரில் கூறியுள்ளது.

இந்த லஞ்ச புகார் காரணமாக ராஜஸ்தான் மாநிலம் பினாய் காவல் நிலைய எல்லைப் பகுதியில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தனிப்படை போலீஸ் 12 பேரை ராஜஸ்தான் போலீஸ் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் 500 தனியார் பேருந்துகள் ஏன்? அமைச்சர் அளித்த விளக்கம்!
லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக பிடித்ததாக ராஜஸ்தான் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாக சொல்கிறார்கள். தமிழ்நாடு போலீஸ் ராஜஸ்தான் போலீஸிடம் இது தொடர்பாக பேசிவருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி