முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி யாருக்கு? என்பதில் பெரும் குழப்பம், நிலவி வருகிறது. சசிகலாவுக்கு பிறகு டி.டி.வி தினகரன் என்ற நிலையை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சேர்ந்தே மாற்றினர். இவர்களுக்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான பஞ்சாயத்து தொடங்கி நாளுக்கு நாள் நீண்டு கொண்டு செல்கிறதே தவிர, இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை.
அதே சமயம், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களை கைக்குள் போட்டுக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை தக்கவைத்து கொண்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையை அடித்து நொறுக்கி சூறையாடியதாக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்தே நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தடாலடியாக அறிவித்துவிட்டு சட்டப்போராட்டத்தை தொடங்கினார்.
ஒருபுறம் ஓபிஎஸ் சட்டப்போராட்டத்தை முடுக்கி விட்டுக் கொண்டே மறு புறம் அனைத்து மாவட்டங்களிலும், தனது ஆதரவாளர்களை பலப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே கட்சியில் பின்னடைவை சந்தித்தது போல் கோர்ட்டு வழக்குகளிலும் தொடர்ந்து ஓபிஎஸ் பின்னடைவையே சந்தித்து வருகிறார். இருப்பினும் கட்சியை கைப்பற்றும் முயற்சியை கைவிடுவதாக இல்லை.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வமும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் அதைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் எஸ்’ என்கின்ற பெயரில் ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்திக்காட்டவும் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் சசிகலா ஆதரவுடன் பெரும்பாலான அதிமுக முக்கிய நிர்வாகிகளை பங்கேற்க செய்து எடப்பாடியை டம்மி ஆக்கி ஓரங்கட்ட செய்யவும் அதிபுத்திசாலித்தனமான திட்டத்தை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதை தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, ‘என் தலைமையை ஏற்று கொண்டால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என்று, யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள தயார்’ என்று கூறி, தூது அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்சியில் இருந்து ஒதுக்கி தள்ளப்பட்ட ஓ.பி.எஸ் சசிகலாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அடி மடியிலேயே கை வைக்க துணிந்து விட்ட நிலையில் இனியும் வீராப்பு காட்டினால் வேலைக்கு ஆகாது என நினைத்து பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.
அதே சமயம், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களை கைக்குள் போட்டுக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை தக்கவைத்து கொண்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையை அடித்து நொறுக்கி சூறையாடியதாக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்தே நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தடாலடியாக அறிவித்துவிட்டு சட்டப்போராட்டத்தை தொடங்கினார்.
ஒருபுறம் ஓபிஎஸ் சட்டப்போராட்டத்தை முடுக்கி விட்டுக் கொண்டே மறு புறம் அனைத்து மாவட்டங்களிலும், தனது ஆதரவாளர்களை பலப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே கட்சியில் பின்னடைவை சந்தித்தது போல் கோர்ட்டு வழக்குகளிலும் தொடர்ந்து ஓபிஎஸ் பின்னடைவையே சந்தித்து வருகிறார். இருப்பினும் கட்சியை கைப்பற்றும் முயற்சியை கைவிடுவதாக இல்லை.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வமும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் அதைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் எஸ்’ என்கின்ற பெயரில் ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்திக்காட்டவும் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் சசிகலா ஆதரவுடன் பெரும்பாலான அதிமுக முக்கிய நிர்வாகிகளை பங்கேற்க செய்து எடப்பாடியை டம்மி ஆக்கி ஓரங்கட்ட செய்யவும் அதிபுத்திசாலித்தனமான திட்டத்தை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதை தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, ‘என் தலைமையை ஏற்று கொண்டால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என்று, யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள தயார்’ என்று கூறி, தூது அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்சியில் இருந்து ஒதுக்கி தள்ளப்பட்ட ஓ.பி.எஸ் சசிகலாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அடி மடியிலேயே கை வைக்க துணிந்து விட்ட நிலையில் இனியும் வீராப்பு காட்டினால் வேலைக்கு ஆகாது என நினைத்து பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.