ஆப்நகரம்

எதிர்பார்த்தது தான்: அன்புமணி சாடல்

முதல்வராக ஜெயலலிதா பதவியற்ற விழாவில் திமுக பொருளாளர் ஸ்டாலின் நடத்தப்பட்ட விதம் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.

TNN 24 May 2016, 1:09 pm
சென்னை: முதல்வராக ஜெயலலிதா பதவியற்ற விழாவில் திமுக பொருளாளர் ஸ்டாலின் நடத்தப்பட்ட விதம் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.
Samayam Tamil it is expected anbumani ramadoss on stalin in jayas function
எதிர்பார்த்தது தான்: அன்புமணி சாடல்


தமிழக முதல்வராக ஆறாவது முறையாக ஜெயலலிதா பதவியேற்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்த விழாவுக்கு திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. விழாவுக்கு வந்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள், பின் வரிசையில் அமர வைக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பெரும்பான்மை பலம் கொண்ட எதிர்கட்சியாக அமரப் போகும் திமுக-வை ஜெயலலிதா அவமதித்து விட்டார் என திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில், பதவியேற்பு விழாவில் ஜெயலலிதா அரசு, ஸ்டாலினை நடத்திய விதம் ஏற்கனவே எதிர்பார்த்தது தான் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.

மேலும், டாஸ்மாக் குறித்த தமிழக அரசின் அறிவிப்புகளை வரவேற்கிறோம். மேலும், நடவடிக்கைகள் தேவை எனவும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி