ஆப்நகரம்

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது எங்களின் நோக்கமல்ல: அன்புமணி ராமதாஸ்!

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது எங்களின் நோக்கமல்ல, தமிழகத்தின் வளர்ச்சி தான் எங்களுக்கு முக்கியம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Samayam Tamil 24 Feb 2019, 1:14 pm
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது எங்களின் நோக்கமல்ல, தமிழகத்தின் வளர்ச்சி தான் எங்களுக்கு முக்கியம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Samayam Tamil தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது எங்களின் நோக்கமல்ல: அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது எங்களின் நோக்கமல்ல: அன்புமணி ராமதாஸ்!


வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் பாமக பிரமுகர் புல்லட் ராதாகிருஷ்ணன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில்; அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது எங்களின் நோக்கமல்ல. தமிழகத்தின் வளர்ச்சி தான் எங்களுக்கு முக்கியம். அந்த அடிப்படையில் தான் தற்போது கூட்டணி ஏற்படுத்தியிருக்கிறோம். இந்த கூட்டணியை மக்கள் நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

பாமக தமிழக வளர்ச்சிக்காக பல கட்டபோராட்டங்களை நடத்தியிருக்கிறது. பாலாறு, அத்திகடவு அவிநாசி திட்டம், காவிரி காப்போம் என நீர்நிலைகளை காத்திட தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் நீர்நிலைகளை காத்திட இதுவரையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இனியாவது நீர்நிலைகளை காப்பாற்றி விவசாயத்தை காப்பாற்ற வேண்டும். விவசாயிகள் தெய்வத்திற்கு ஈடானவர்கள். அவர்கள் விளைவித்த விளை பொருட்களுக்கு நல்ல விலைகிடைக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பாமக மாநில தலைவர் ஜி.கேமணி, முன்னாள் அமைச்சர்கள் வேலு, சண்முகம், மூர்த்தி, முன்னாள் சட்டபேரவை உறுப்பினர்கள் இளவழகன், ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி